வழக்கமான விடியல்

என் இமைகள் எழ, அவற்றுடன்
நானும் விழித்தெழ
தொடங்கியது வழக்கமான
எனக்குப் பழக்கமான
நாள்.
கட்டிலை விட்டு இறங்கவா?
இன்னும் கொஞ்சம் உறங்கவா?
யோசிக்கிறேன்.
ஆனால் நடக்கத்தொடங்குகிறேன்
அறையை விட்டும் சென்று விட்டேன்
ஆச்சரியம்! கால்கள் தரையில் படவில்லை.
மறுகணம் இது நனவல்ல
கனவென்று உணர்ந்தேன்
மீண்டும் இமைகள் எழ
நானும் எழ
நனவுலகம்
என் கனவுலகை
வென்றது
என் கால்கள் அறையை விட்டுச்சென்றது.

எழுதியவர் : வெங்கடேஷ் PG (21-Feb-15, 2:52 pm)
பார்வை : 106

மேலே