துக்கப்பால் கவிதை

*
உன் மரணச் செய்தி
உடனடியாய் அறிந்து
பரபரப்பாய் சுடலைக்கு வந்து
புன்னகைச் சிந்திய
உன் வாய்க்கு
வாக்கரிசிப் போட்டான்.
நன்றியோடு
இன்பத்துப் பால்
ஊட்டிய உனக்குத்
துக்கப் பால்
ஊற்றுகிறான் பார்….!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (22-Feb-15, 9:25 am)
பார்வை : 62

புதிய படைப்புகள்

மேலே