பெண்ணாய்ப் பிறந்துபார்

ஆணெனும் ...
அகந்தை கொண்டேரே ...!

பெண்ணாய்ப் பிறப்பெடு !
புடவை உடுத்திடு!
அப்போது புரியும்
அவள்படும் வேதனை!

ஒதுங்கியிருக்கும்
மூன்று நாள்களை
எண்ணிப்பார்...
அவள்
மூச்சடக்கி
முத்துக்குளிப்பது புரியும்!

கருவுற்றுப்பார் !
பெண்ணின் பெருந்துன்பம்
என்னவென்று புரியும் !

பத்து மாதம்
உயிர் சுமந்து...
பார்த்துப் பார்த்து
நடை நடந்து ...
மூன்று நேரம் முக்குளித்து
பக்குவமாய் உயிர் ஈனும்
உண்மைப் புரியும்...!

அப்போது தெரியும்
பெண் என்பதன் பொருள்
துன்பம் என்று !

இளைப்பாற மட்டும்
பெண் வேண்டும் !
அவளின்
நிலைபார்க்க மட்டும்
ஏன் மறந்துவிட்டாய் !

காதலெனும் வலைவீசி
அவளைக்
கவிழ்க்க நினைக்காதே !

காதல் படகில் ஏற்றிக்
கரைகொண்டு சேர் !
காலமெல்லாம் காப்பாற்று!

எழுதியவர் : தன்முகநம்பி (22-Feb-15, 10:53 am)
சேர்த்தது : தன்முகநம்பி
பார்வை : 438

மேலே