சுயநலப் பேய்கள்
ஆசையுடன் அள்ளி வளர்த்த
அன்னையவள் அன்பைச் சொல்ல
ஆவன செய்ய மறந்தாளோ?
மரமென வளர்ந்திட்டார்
மரமாகவே வாழ்கின்றார்
நன்மரம் என்றாயின்
கனியன்றோ தரவேண்டும்?
காயில்லா மரமாயின்
நிழலாகினும் தரலாமே?
காயும் கொடேன்
நிழலும் தந்திடேன்
என்றல்லோ வாழ்கின்றார்
சுயநல நாடிகளாய்!
தனகொன்று வேண்டுமாயின்
கால்பிடிக்கத் தயங்கிலார்
பிறர்கென்று வருங்கால்
புறமுதுகிடுகின்றார்!