அனுபவங்கள் தந்த பாடம்

இன்பத்தினும் துன்பமே நலமளிக்கும் – அந்த
உண்மையினை வாழ்க்கையே உனக்குரைக்கும்
நன்மைகள் சேர்ந்திடவே உளங்களிக்கும் – வெற்றிக்
களிப்பினிலே மூழ்கியே தனைமறக்கும்!
கண்ணிலே படாமலேயே பகைவளரும் – தக்க
தருணத்தினிலே கதிகலங்கச் செய்துவிடும்
புண்ணிலே வேல்பாய்ச்சல் போலிருக்கும் – அது
படிப்பினையை உனக்கெளித்து விடைபகரும்
எண்ணிலா அனுபவங்கள் தந்தபாடம் – எண்ணி
வாழ்ந்திட்டால் சூழ்ந்திடாது துன்பமேகம்!