காதல் தந்த தோல்வி

விரும்பிய யாவையும்
கிடைத்திடுவதில்லை
கிடைத்திட்ட யாவுமே
நிலை பெறுவதில்லை
நிலை பெற்ற சிலவும்
நிரந்தரமில்லை
நிறைவு தந்த சிலவும்
துணைவருவதில்லை
நீயே என் உயிா் என்றவளும்
உயிரை விடவில்லை
நான் உயிா்நீத்த பின்னா்
உணா்ந்தது உயிாின் அருமையை
உயிரற்ற என் ஆன்மா
வாழ்வின் வலிகளை சுமக்க
வருந்தியவன்
சாவின் வலியை சுமந்தது
எவ்வாறோ?
சாவதற்கு ஒரு வழி தந்த
உலகம்
வாழ்வதற்கும் வழிகள் பல
தந்திருக்கும் நான் கொஞ்சம்
பொறுத்திருந்தால்
காக்கை விழி மூடினால்
உலகம் இருண்டது போல
காதலி சென்றதும் சகலமும்
இருண்டது என் வாழ்வில்
காதலின் விளிம்பில்
விலகி போனவளை எண்ணி
விசமத்தன்மையறியா மனம்
விசமருந்த துணிந்தே விட்டது
இறுதியில்
நான் செல்வது இடுகாடு
நீ செல்வாய் புகுந்த வீடு
-----------------------------------------------------------------------------------------------
காதல் தோல்வியே வாழ்வின் முடிவாய் எண்ணி உயிா்விடும் அப்பாவிகளுக்கு சமா்ப்பணம்