விசேச தினங்களில்

....விசேச தினங்களில்....

முந்தும் முயற்சில்
சந்தடி இடைவெளில்
சில கால்களை
மிதித்தவாறும்
சில எளியாரை
புறந்தள்ளியவாறும்
தொண்டை கவ்விய
கெட்டவார்த்தையை
விழுங்கியவாறும்
கொஞ்சமாவது
மனிதநேயம்
நசிந்தப் பின்னரே
தரிசனம் தரும்
கடவுளின் முன்
கண்களை மூடி
கன்னத்தில்
போட்டுக்கொள்வான்.
அதோ
குழந்தை அழுகிறது.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (23-Feb-15, 12:36 pm)
பார்வை : 54

மேலே