காதலியே கேள்
நீ யாரோ நான் யாரோ
நீரும் நெருப்பும் யார் யாரோ
நீ யாரோ நான் யாரோ
நிலவும் வானும் யார் யாரோ
நீயும் நானும் பிரிந்துவிட்டால்
இந்த பூமியில் வாழ்வு இல்லை
நீயின்றி நானிருந்தால்
இந்த பூமியோ அழகு இல்லை!
நீ யாரோ நான் யாரோ
இரவும் பகலும் யார் யாரோ
நீ யாரோ நான் யாரோ
இடையும் உடையும் யார் யாரோ
நீயும் நானும் கலந்துவிட்டால்
இந்த விடியலோ இன்பநிலை
இடையிலேநீ பிரிந்தால்
என் வாழ்விலே துன்பநிலை!
நீ யாரோ நான் யாரோ
ஊரும் பேரும் யார் யாரோ
நீ யாரோ நான் யாரோ
உயிரும் உடலும் யார் யாரோ
உன் பெயரை எடுத்துவிட்டால்
எனக்கேது விலாசம்
உயிரே நீ பிரிந்துவிட்டால்
எனக்கேது சுவாசம்!