விடியல்
எழுந்ததும் எவ்வாறு
இருக்கிறது தன் முகம்
என்று செல்பி க்ளிக்கி
முகநூலில்
அப்ளாஸ் அள்ளுபவன்...
நடுசாமம் ஆரம்பித்து
அதிகாலை வரை
சாட்டில் கழித்துவிட்டு
களைப்படைந்து
தூங்குபவன்...
பி.பி.ஓவில் பேசி பேசியே
களைப்படைந்து
பிற்பகலில் பல் துலக்குபவன்...
இவர்களுடன் தான்
என் பொழுது புலர்கின்றது.