வள்ளுவமே வாழ்வு

உழைப்பு ஒன்றே உன்னை உயர்த்தும்
உண்மை ஒன்றே உலகில் நிலைக்கும்
உணர்ந்து செயல்படு தோழா! - இதை
உணர்ந்திட இத்தனை நாளா!

அய்யன் வள்ளுவர் அவதரித்தார்
அருங்குறள் தன்னை அவர்படைத்தார்
அன்பினை அருளினை எடுத்துரைத்தார் - உயர
ஆள்வினை உடைமையை அவர்கொடுத்தார் !

உழைப்பும் முயற்சியும் இருந்திட்டால்
உயர்வைத் தடுக்க முடியாது
மலைத்து நின்று தேங்காமல் - நல்
மாற்றம் காண விளைந்திடுவாய் !

வள்ளுவர் வழியைப் பின்பற்றி
வாழ்வில் நாமும் பயணித்தால்
வல்லமை பெற்றுத் திகழ்ந்திடலாம் - உலகில்
வருத்தம் இன்றி உயர்ந்திடலாம்!

எழுதியவர் : தன்முகநம்பி (2-Mar-15, 7:46 pm)
சேர்த்தது : தன்முகநம்பி
பார்வை : 90

மேலே