அணு அணுவாய்

உன் பிரிவை கேட்ட போது...

கண்ணோ...

உன்னவனுக்காக அழும் போது
நானும் புது புது காவியம் படைக்கிறேனடி கண்ணீராய்...

மனமோ...

உன்னவன் சென்றாலும்
தென்றல் காற்றும் வீசுமடி அவன் நினைவுகளால்...

கைகளோ...

நன் படைக்க பட்டதோ
உன் கண்ணீரை துடைக்க அல்ல...
உன்னவனை குழந்தையாய் கைகளில் ஏந்த...

கால்களோ...

உன்னவன் உன்னை விட்டுச் செல்லவில்லை...
உன் மலர் போன்ற பாதங்கள் நடக்க
மலர் பாதங்களை அவன் வாழ்க்கை தோட்டத்தில் அமைக்கத்தான்...

உன்னை நேசித்தது நான் மட்டும் தான் என நினைத்தேன்...

உயிரின் ஒவ்வொரு அணுவையும் நேசிக்க வைத்திருக்கிராயடா...

இப்படிக்கு உன்னை அணு அணுவாய் காதலிக்கும் உன் உயிர்...

எழுதியவர் : மதுராதேவி... (8-Mar-15, 10:05 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : anu anuவாய்
பார்வை : 82

மேலே