மாட்டாயோ கேட்டாயோ காட்டாயோ
மாட்டாயோ கண்ணே! மாட்டாயோ
ஒரு காலில் காதல் தவமிருக்கும்
காந்தவிழியாளனை புரிய மாட்டோயோ?
கேட்டாயோ பெண்ணே! கேட்டாயோ
அவன் நெஞ்சில் குடியிருக்கும்
உந்தன் நினைவொலியை கேட்டாயோ?
காட்டாயோ விழியாளே! காட்டாயோ
உன் கல்நெஞ்சத்தில் வீற்றிருக்கும்
காதல் சிற்பத்தை காட்டாயோ ?