காற்றின் பாடல்

காற்றூதிச் செதுக்கும்
கடல்பெருவெளியின்
அலைகளதன் நாவற்ற
மொழிகளின் பேரிரைச்சலால்
பதிலுரைக்கிறது
தன்மீது நீந்தியூரும்
மீன்களுக்கு சாத்தியமாக
வலையூன்றி நிற்கும்
படகை நகர்த்தித்தருமாறு…
குத்திக்கிழிக்கும்
பாய்மரத்தின் கீழே
சமரசம் பேசிக்கொண்டிருக்கும்
மனிதனின் செவியறைய
காற்றே உரக்கப்பாடியது
மரணத்திற்கான பாடலை.

எழுதியவர் : வன்மி (28-Mar-15, 12:50 pm)
பார்வை : 47

மேலே