உயிரே என்னை மன்னிப்பாயா

உன்னால் முடிகின்றது
ஊமையாக நடிக்க
என்னால் முடியவில்லை
மொழி இருந்தும் பேச .
உன்
பிரிவு என்னை
அணைத்த பின் தான்
புரிந்து கொண்டேன்
பிரிந்தது உறவல்ல
உயிரென்று ...
பிரியமானவனே பேசிடு
ஒரு வார்த்தை
பிரிவின் பின் எனும்
பேதை என்னை மன்னிப்பதாய் ..!!