துளிப்பாக்கள் - 1

@@@@@@@@@@@@@@@@@@@@@@

கண்கள்
இதயத்திற்கு செய்யும் துரோகம்
காதல்

@@@@@@@@@@@@@@@@@@@@@@

வெளியில் தொங்க விட்டதற்காக
முறைத்தபடி கோபம் கொண்டன
திருஷ்டி பொம்மைகள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@

புதிய வெளிநாட்டு தொழிற்சாலையால்
கருத்தடை செய்யப்பட்டன
கழனிகள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@

கண்ணாடி அலமாரிக்குள்
அலறிக் கொண்டிருக்கின்றன சிறைபட்ட
புத்தகங்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@

தூக்கில் தொங்கியது
நீர் அற்ற கேணியில்
வாளி!

@@@@@@@@@@@@@@@@@@@@@@

சுத்தமானது குடுவை
அசுத்தமானது குடல்
மதுவால்....

@@@@@@@@@@@@@@@@@@@@@@

கைப்பேசி
விரல்பேசி களாகிவிடுகின்றன
குறுஞ்செய்திகளால்

@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (8-Apr-15, 1:21 pm)
பார்வை : 156

மேலே