காதல் வேட்கை

காதல் வேட்கை ...

காதல் வேட்கை ...
கோடரி போன்றது ...
காதல் வரும் வரை நாணம் ...
வந்தபின் நாணத்தை காணாமல் ...
வெட்டி எறிந்துவிடும் ....!!!

எத்தனைதான் ...
நாணத்தால் காதலை ...
மூடி வைத்தாலும் -ஒரு
நொடியில் காதல் மரத்தை ..
வெட்டும் கோடரிபோல்...
உடைத்து எறிந்துவிடும் ....!!!
+
குறள் 1251
+
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 171

எழுதியவர் : கே இனியவன் (14-Apr-15, 10:08 am)
பார்வை : 58

மேலே