இரக்கமே அற்றது காதல்

காதல் வேட்கை ...
இரக்கமே அற்றது ....
என்னை நினைக்காமல் ...
உன்னை நினைக்க வைக்கிறது ....!!!

நிம்மதியாய் ...
தூங்கும் நள்ளிரவில் கூட ..
உன் நினைவால் வதைத்து ..
கொல்கிறது...
+
குறள் 1251
+
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 172

எழுதியவர் : கே இனியவன் (14-Apr-15, 10:21 am)
பார்வை : 52

மேலே