மனைவி

கண்ணுக்கு இனியவள்
கருத்தை மதிப்பவள்
கனவை நிறைவேற்றுபவள்

கறி சோறானாலும் ,
கத்தரிக்காய் கூட்டானாலும்
கைமணம் மாறாமல்
பக்குவமாய் பறிமாறுபவள்

நிலை தடுமாறும் போது
மலை போல் தூக்கி நிறுத்துபவள்

ஒட்டுமொத்தத்தில்
மனதிற்குள் மனைவி
மனைவிக்குள் மனது

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (21-Apr-15, 1:51 pm)
சேர்த்தது : காஜா
Tanglish : manaivi
பார்வை : 3556

மேலே