தனிமை நினைவுகளின் சிறு துளி சாரல்கள்

"போய் வா"
என்னையும்
புரிந்துக்கொள்கின்ற
கணத்துக்காகவும்
உனக்காகவும்
காத்திருக்கிறேன்
என் காதலோடு..
----------------------------------------------------
தயவு செய்து
என் காதல்
மரணிப்பதற்குள்ளாவது
என்னைப்
புரிந்துக்கொள்ள
முயற்சி செய்யேன்...
----------------------------------------------------
விளங்காத
பொழுதிலும்
விளக்கிடவே
முயல்கிறேன்,
முயன்றும்
தோற்கிறேன்
தோற்றும்
முயல்வேன்
கரம் கோர்க்கவே
துடிக்கிறேன்
துடிதுடித்தே
துவல்கிறேன்...
----------------------------------------------------
எனக்கும்
என் தனிமைக்கும்
நடுவே
நிரப்பப்படுகின்றன
வெற்றுப்பக்கங்களால்...
நிரப்பப்படும்
பக்கங்களும்
கிழிக்கப்படுகின்றன..
வழக்கம் போல்
மீதமாக
நானும்
என் தனிமையும்...
----------------------------------------------------
உறங்குகின்ற
பொழுதொன்றில்
உறங்கவிடா
நினைவுகளை
உருப்பிரித்து
உலுக்கி,
சலித்து
உணர்ந்து
உலர வைத்து
உறைந்து விட்ட
பொழுதொன்றில்
உறங்கிப் போகிறேன்...
உன்முகம் பாராமல்
உன் பதில் காணாமல்..
----------------------------------------------------
உன்முன்
மண்டியிட்டு
யாசிப்பது
உன்னொருத் துளி
அன்பைத் தவிர
வேறொன்றுமில்லை..
----------------------------------------------------
என்னை
நம்பாதோர்க்கு
எப்படி புரியும்
என் வார்த்தைகளின்
அர்த்தம் மட்டும்..
----------------------------------------------------
தனிமை
அது
எனக்கு
மட்டுமான
சாபம்
உனக்கென்றும்
கிட்டாத
வரம்...
----------------------------------------------------
இதுவரை
யாரிடமும்
கேட்டதில்லை
யாசகம் மட்டும்..
தருவார் அறிந்து
கேட்க வேண்டும்
பரிசாக
மரணத்தை மட்டும்..
----------------------------------------------------

எழுதியவர் : கார்த்திக் (23-Apr-15, 11:43 am)
பார்வை : 89

மேலே