ஐயோ

கேட்க்கவே மாட்டேன் என்றே பிடிவாதம் ...
அடிகள் பட்டும் திருந்த மாட்டேன்
தடுத்தாலும் மீண்டும் அங்கேயே செல்வேன்
காயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்கிறேன்
மறுபடியும் அதயே நாடுகிறேன்
என்னை என் வழியிலே விட்டுவிடேன் ....
அய்யஹோ....??!!
புரிதல் வேண்டும் என்கிறேன்
பழகிக் கொள்ளலாம் என்கிறாய்
வீண் பரீட்சைகள் வேண்டாம் என்கிறேன்
பார்த்துக் கொள்ளலாம் என்கிறாய்
ஏமாற்றம் தான் மிஞ்சும் என்கிறேன்
கடந்து போகலாம் என்கிறாய்
அய்யஹோ....??!!
எனக்கும் எனக்கும் ஏன் இத்துணை
முரண் பாடுகள் ...
என்ன சொல்ல என்றே எனக்கு தெரியவில்லை
ஏனோ இந்த காதல் படுத்தும் பாடு ....

எழுதியவர் : (27-Apr-15, 4:45 pm)
சேர்த்தது : தர்வேழ் மைதீன்
Tanglish : ayyo
பார்வை : 78

மேலே