வறுமை

உடலை வாட்டி மனதை வருத்தி …
பட்டினியில் இறைவனை
நினைத்திரு என்கிறது ஆன்மிகம் …!!
தினமும்
நடு சந்தியில் தவமிருக்கும்
வறியவனுக்கு இதுவரை
என் செய்துள்ளது ….!!!
ஒட்டிய உடலையும்
வாட்டிய வெயிலில் அற்பணிக்கும்
அவ்வுயிர் என்ன
இறை கண்ணுக்கு விதிவிலக்கா…!!!