அண்ணன்
வழிமேல் விழிவைத்து
காத்திருப்பேன்!
ஆடுமேய்த்து திரும்பும்
அண்ணனுக்காக!
மடித்துகட்டிய லுங்கியின்
கனத்தைப் பார்த்தே மனம்
குதுகலிக்கும்!
காரப்பழம்
கொடுக்காப்புளி
எலந்தம்பழம்
நாவல்பழம்
பட்டிக்குள் அடைபடும்
ஆடுகளுக்கு முன்னே
எங்கள் வயிறும் மனமும்
சேர்ந்து நிறையும்!
இப்போதும் சேர்ந்தே
போவோம் நானும்
அண்ணனும்!
ஆடு அடைக்கும்
பட்டிகளில்லை!
கனிதரும் காடும்
இல்லை!..