மதினி கவிதை

*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (28-Apr-15, 8:46 am)
பார்வை : 343

மேலே