இரவின் அமைதியில்

ஒரு நிம்மதியான
இரவுத் தூக்கத்தின் இடையில் ..
என்னைக் கிழித்துப் போட்ட
கனவு..ஒன்று..

***************************************************
எதற்காக..
இத்தனை காலம்
கழித்து ..வந்தாள்..
என் கனவில்?

****************************************************
அழுது வடியும் ஒரு இரவின்
தொடக்கத்தில் ..
பைன்ஸ் மரங்களின் ஊடே..
என்னை நிர்க்கதியாய் விட்டு
ஒரு ஒற்றைச்சொல்லில்
"பிரிகிறேன்"..
என்று சொன்னவள்..
திரும்பி வந்து
"இனி என் கனவில் கூட
வராதே"
என்று போனவள்..
****************************************************.
எதற்காக..
இத்தனை காலம்
கழித்து ..வந்தாள்..
என் கனவில்?
****************************************************..
தூரத்தில் எங்கோ
இரண்டு பூனைகள்
சண்டையிட்டு
அலறிக் கொண்டிருக்கின்றன..
இந்த இரவின் நிசப்தத்தை
உடைத்தபடி !
****************************************************

எழுதியவர் : கருணா (30-Apr-15, 4:39 pm)
Tanglish : iravin amaithiyil
பார்வை : 863

மேலே