முதலாளித்துவம் வேண்டாம்

முதலாளியின் கைபேசி
அதன் தொடுதிரையில் தொழிலாளியின் பிம்பம்
அவன் அவல நிலைக்கண்ட
அந்த முதலாளியின் வேண்டுகோள்!
இரத்தம் சதை உயிரென்று மனிதனை மதிக்க
புவியில் நல்ல மனிதரென்று
ஒருவரையும் காணோம்!
முதலாளிகளே!
நாம் எல்லோருமென்ன மூட்டைப் பூச்சிகளாய் மாறிவிட்டோமா? மனிதம் கொஞ்சநஞ்சமும் இல்லாமல் மனிதனே மனிதனின் இரத்தத்தை உறிஞ்ச தொடங்கி விட்டோம்.
இன்றோ தேய்பொருளாய் தொழிலாளியின் தேகம்
அவன் தேய்மானம் கண்ட
இயந்திரம் அல்ல புதுபிக்க,
தெரிந்தே நமக்கு
இரத்தம் தானம்
கொடுக்கும் இரத்தினம்
முதலாளித்துவம் வேண்டாம்!
நம் உறிஞ்சு திறன் குறைத்து
அவன் உயிருக்கு திறன் கொடுப்போம்.