பொன் வரிகள்

விட்டுக் கொடு வாழ்கையில்
கற்றுக் கொடுப்பாய் வெற்றி

பட்டுத் தெளி பக்குவம் பலதும்
ஏற்றுக் கொள்வாய் எதுரும் புதிரும்

கேட்டுக் கொள் கற்றதின் பொருளை
மட்டும் கொள்வாய் உயர்ந்த எண்ணம்

போற்றிக் கொடு உயர்வின் பயன்
பெற்றுக் கொள்வாய் மகிழ்ச்சியின் திளைப்பை

காட்டிக் கொடு பொறாமையின் கேடு
மீட்டுக் கொடுப்பாய் பொன்மனம் தன்னை

எழுதியவர் : பாத்திமா மலர் (4-May-15, 7:02 am)
Tanglish : pon varigal
பார்வை : 155

மேலே