சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே

ஓம்பும் உயர்ந்தோர் உரைத்திடும் நல்மொழி ஊக்கந்தரும்
தேம்பல் விடுத்துநீ தேறிட தைரியம் சேர்ந்துவரும்
சூம்பிக் குமைவதில் சோர்வு மிகுந்திடும் சுந்தரனே
சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே !


( இலந்தையார் தந்த ஈற்றடிக்கு எழுதிய கட்டளைக் கலித்துறை )-

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-May-15, 10:43 am)
பார்வை : 97

மேலே