வலிகளின் வலி

வலிகளின் வரிகளை
படித்திடும் பொழுதே
இதயத்தின் துடிப்பும்
எகிறித்தான் போகுதே...!

வலிகளும் மாறும்
துயரங்களும் தீரும்
வார்த்தையின் வடுக்கள்
ஆறாது உயிரே...!

தற்கொலை என்பது
கோழையின் வகை
நம்பிக்கையே உன்
மூன்றாம் கை...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (21-May-15, 9:57 pm)
Tanglish : valikalin vali
பார்வை : 187

மேலே