மனிதம் மீண்டும் மலரட்டுமே

"மனித நேயம்",
இது மனிதன் காக்க "மறந்த நேயம்"!
அடுத்த தலைமுறை என்னவாகும்
மனிதம் மனதில் இல்லையென்றால்?

இறைவா!
இந்த மானங்கெட்ட மனிதரிடை
மனிதம் மீண்டும் மலரட்டுமே!
மண்ணில் மனிதம் மீண்டும் மலரட்டுமே!

விதையின் சுவற்றை ஓங்கி மிதித்து உயர்ந்து வளரும் மரங்கள் போலே
தன்னலக் கருத்தை ஓங்கி மிதித்து மனிதம் மீண்டும் மலரட்டுமே!
மண்ணில் மனிதம் மீண்டும் மலரட்டுமே!

பசியின் பள்ளம் கண்டவனுக்கே உணவின் அருமைத் தெரியுமாம்!
ஆறுதல் இன்றி திரிந்தவனுகே உறவின் அருமைத் தெரியுமாம்!

இல்லாமை ஒன்றுதான் அறிவின் திறவுகோல் என்றால்,
"அருமை" புரியும் வரை
அனைவருக்கும், எல்லாமும் இல்லாமல் போகட்டுமே!
மண்ணில் மனிதம் மீண்டும் மலரட்டுமே!

மூச்சுவிடும் காற்றில் கூட சுயநலத்தின் வாசனை!
கனவுகளில் கூட இல்லை மனிதநேயக் கற்பனை!

இன்று முதல் கண்ணில் கொஞ்சம் மனிதம் வந்து ஒளிரட்டுமே!
சுயநலத்தின் வேரினின்று மனிதம் மெல்ல வளரட்டுமே!
மண்ணில் மனிதம் மீண்டும் மலரட்டுமே!

எழுதியவர் : perumal (23-May-15, 4:16 am)
சேர்த்தது : பெருமாள் ராஜா
பார்வை : 1554

மேலே