இன்று முளைத்த காளான்

இன்று பெய்த மழையில்
இன்றே முளைத்தாலும்
நாளை பார்ப்பவர் சொல்வார்
நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்தது..!

நீ வாங்கிய வெற்றிகள்
குறைவென்று சிரிப்பவரிடம்
எப்படி புரியவைப்பாய்
குறைந்த அதிர்வெண்ணிலேயே
சிங்கம் முழங்கிவிடுகிறதென..

குறைகளை தேடி பிடித்து
குத்திச் செல்பவரிடம்
சிரித்த முகத்தோடு சொல்லியனுப்பு
அத்தனையும் அக்குபஞ்சர்.

முடிந்தவரை வேகமாய் ஓடி
கடைசியாக வந்தாலும்-உனக்காக
பலத்த கைத்தட்டல் கேட்கிறது
இடப்பக்கம் இருக்கட்டும் உன்
வலது கை..!

குனிய வைத்து எழுபவரிடம்
நிமிர்ந்து நின்று சொல்
எட்டு நியூட்டனில் உடைந்துவிடாது
என் முதுகெலும்பென்று..!

உன் முயற்சிகளை
வாசித்துவிட்ட பின்
எச்சில் தொட்டுத் தடவி
பக்கம் திருப்புபவர்கள்
நிறைய உள்ளனர். கவனம்..!

காணாமல் போய்விட்டானெனும்
கெகபெகேக்களுக்கு தெரியாது
நீ இன்னொரு வானத்தில்
உதித்துக்கொண்டிருப்பது..!

எல்லாமும் தாண்டி வாழ்..!
வாழ்க்கையென்பது
போராட்டமாம் நந்தவனாமாம்
குழப்புவதற்கு கொடுக்கப்பட்டவை.
மரணமென்ற பக்கத்தில் தான்
விடையெழுதி வைக்கப்பட்டுள்ளது.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (23-May-15, 7:23 am)
பார்வை : 544

மேலே