கருவாட்டுச் சிரிப்பொலி
மணக்கும் மலர்த் தோட்டத்து
மண்ணின் மைந்தர்களே
வாசமலர்களே !
வயிறு பசித்தால்
பூவையும் இலையையும்
மண்ணையுமா தின்பான்
வாடை அடித்தால் என்ன
வயிற்றுக்கு உணவு
கருவாடுகள் தானே !
ஹா ஹா ஹா
கூடையுடன் குலுங்கிச் சிரித்தன
கருவாடுகள் !
---கவின் சாரலன்
இழிவு வருங்கால் நகுக ------வள்ளுவர்

