சிசுக்களை தின்னும் பெளத்தம்----அஹமது அலி----

பற்றி எறிகிறது பர்மா தேசம்
கரிக்கட்டையாகிறான் முஸல்மான்
சுற்றிலும் காக்கப்படுகிறது கள்ள மெளனம்
ஊமையாகிப் போனது சதிகார உலகம்...
---------------------------------------------------------
கபட நாடகக் கலையின் ஊற்றுகளே
மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த அபிமானிகளே
கண்ணிருந்தும் நீங்கள் குருடனானீரோ
கண்ட பின்னும் கண்களை மூடிக் கொண்டீரோ.?
----------------------------------------------------------
புத்தனின் போதனை வேதனையாகிறது
ஆனந்தக் குருதி அவன் கண்ணில் வழிகிறது
கொல்லாமை கொள்ளாமை பெளத்தமாகிறது
பிற இனமில்லாமை ஆக்குவது நீதியாகிறது...
----------------------------------------------------------
பச்சிளம் சிசுக்களை தீயவரின் தீ தின்றது
பாவிகளின் ஆயுதங்கள் முதியோரை கொன்றது
அப்பாவிகளும் அநியாய வதையில் மாண்டனர்
அவர்தம் உடமைகளை இனவாத பேய்கள் விழுங்கினர்.
-------------------------------------------------------
ஒற்றை மலாலாவிற்கு ஒப்பாரிகள் என்ன?
ஊடகங்களுடன் சேர்ந்து ஊளையிட்டது என்ன?
ஓராயிரம் மலாலாக்கள் கருகி விட்டனர்
எங்கே போனது உங்கள் மனிதம் வேஷதாரிகளே!
--------------------------------------------------------
இன்னொரு மலாலா நாடகம் நடக்கும் வரை
இன்னொரு றிசானா தண்டனை பெரும் வரை
முகமூடிக்குள் ஒளிந்து கொள்ளுங்கள்
எங்களின் சீழ் குடிக்கும் மனக்குள்ளர்களே....
-------------------------------------------------------
அடக்குமுறை ஏவப்படும் போது பார்த்திருங்கள்
அடக்கு முறைக்கெதிராய் ஆயுதம் ஏந்தும் போது
தீவிரவாதிகளென்று தீர்ப்பு கொடுங்கள்-உங்கள்
வேசித்தனங்களை வெளிச்சம் போடுங்கள்...
--------------------------------------------------------
மனிதபிமானம் பேச வாயை திறக்காதீர்
மலத்தால் அடிப்போம் மறவாதீர்
படைத்தவன் மட்டும் போதும் எமக்கு
படைகள் பல வரட்டும் ஈமான் இருக்கு.!
-----------------------------------------------------------

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (26-May-15, 9:41 am)
பார்வை : 173

மேலே