நீ ஒரு வானவில்

அதோ ஒரு வானவில்
ஏழு நிறங்களில்
வானில் முகில் திரையில் ...
சிறிது சிறிதாகக் கலைந்துவிடும்
சிறிது நேரத்தில் .....
இதோ நீ ஒரு வானவில்
கலையாத அதிசயமாக
வண்ணங்களின் நிஜமாக
வார்த்தைகளில் வரிகளில் கவிதையாக
வசந்தகால தேவதையாக .....
____கவின் சாரலன்