மனிதனாக மாற பார்

சாதிகளை
தூக்கி சமுத்திரத்தில் எறியுங்கள்
அதன் 'உப்பு' நீர் கூட
'இனிப்பாக' மாறிவிடும்!
அந்த நீரை அனைவரும்
அருந்துங்கள் - மனிதர்கள்
உங்கள் கண்ணீர் கூட
தித்திப்பு ஆகிவிடும் ...............

மதங்களை தூக்கி - நம்
நாட்டின் எல்லையில் வையுங்கள்
எல்லை தாண்டி யாரும்
வரமாட்டார்கள் நம்மை பிரிக்க!

சாதி என்பது உன் உயிரல்ல!
மதம் என்பது உன் உணர்வல்ல!
நீ மனிதன் என்ற உயிர் !
அதில்
மனிதநேயமே உன் உணர்வு!
முயற்சித்து பார் .....மனிதனாக மாற ..........

என்றும் அன்புடன்
எ. மனிமுருகன்

எழுதியவர் : (31-May-15, 1:26 pm)
பார்வை : 65

மேலே