இசைஞானி எனும் மருத்துவர் ~ சந்தோஷ்

இன்னும் என்னை
என்ன செய்யப்போகிறாய்
ராஜா ராஜா
இளையராஜா ?
ஏதோ ஏதோ செய்துவிட்டாய்
எது எதுவோ என்னை
மாற்றிவிட்டாய்
ராஜா உன் அற்புத இசையினாலே.!
என் அன்னையின்
கருவறையில் நான்
உருவானப்போதே
உன் விரல்களில்
உருவான மெட்டுகள்
கேட்டு ரசித்து
தலையாட்டினேனாம்.
இதோ.. இப்போதும்
நான் தலையாட்டுகிறேனய்யா
பல நேரம்
என் தனிமைக்கு
உன் இசைதான்
தோழி
என் தோல்வியில்
உன் இசைதான்
காதலி
ஆம்
என் வெற்றியில்
உன் பாடல் கேட்டு
துள்ளும் மனம்
ஒரு தோல்வியில்
உன் பாடலே
அரவணைத்துக் கொள்ளும்.
எத்தனை முறை
நான் அழுதிருக்கிறேன்..
தெரியுமா இசைராஜா?
ரசிப்பில் சிலநேரம்
நெகிழ்ச்சியில் சிலநேரம்
மகிழ்ச்சியில் சிலநேரம்
மனித உணர்ச்சிக்கெல்லாம்
எப்படி ராஜா உன்
ஹார்மோனியம்
அர்த்தம் கண்டு
உளவியல் இசைப் போடுகிறது.
உன் மூளையில்
உருவான
மெட்டுகளும் பாட்டுகளும்
மட்டும் இல்லையென்றால்
என் மூளை
சில நாட்களுக்கு முன்
வெடித்துச் சிதறியிருக்கும்...
இன்னும் என்னை
எதுவோ செய்கிறாய்?
செய் ராஜா செய்...
உன் இசைக்கேட்டே
என் மரணம்
தள்ளிப்போனாலும்
நாளைய
என் மரணத்திற்கு
அடிக்கப்படும் பறைக்கு
உலகத் தகுதியை
பெற்றுக் கொடுத்த
வல்லவனே !
உனக்கு இன்று பிறந்தநாளாம்...
உன்னைத்தான் தினமும்
வாழ்த்துகிறேனே.
ம்ம் இன்றும் கூடுதல்
இந்த வரி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இசைஞானி எனும் மருத்துவரே..!
----------
-இரா.சந்தோஷ் குமார்