என் இனியவளே …

உன் நினைவுகளை
என் நெஞ்சில்
கல்லறை ஆக்கிவிட்டு
என் இதயமதை
மெல்ல களவாடி
சென்றாயே ……..!

இக்கல்லறைக்கு
உன்தன் புன்னகை
பூக்களையேனும்
தினம் கொடுத்து
சென்றுவிடு ….!

சுகமாக நான்
மண்ணுக்கு
உரமாகும்
காலம் வரை ……!

எழுதியவர் : வீ கே (9-Jun-15, 4:05 pm)
சேர்த்தது : விஜய்குமார்
பார்வை : 130

மேலே