குறும்பு பாக்கள் - சந்தோஷ்
காணி நிலம்
கேட்டானே பாரதி
கொடுத்தாயா பராசக்தி
அவனின் கல்லறைக்காவது ?
----
காலம் மாறிவிட்டது
இன்றைய சீதையர்கள்
கோடு கிழிக்கிறார்களாம்
வில்லற்ற இராமன்களுக்கு..!
----
சிவப்பு வீதிகளிலெல்லாம்
விபச்சாரிகளா ?
பச்சை வீதிகளிலெல்லாம்
கண்ணகிகளா ?
----
குடிக்காரனிடமும் நாட்டின்
குடிகெடுப்பவனிடமும்
பரிமாறுகையிலும் சிரித்தப்படியே
இருக்கிறார் ரூபாய் காந்தி
உண்மையில் அவர் மகாத்மாதான்.
---
காந்தி பிறந்த
குஜராத்தில் மட்டும்
மதுவிலக்கு..!
காந்தி தேசப்பிதா அல்ல
மாநிலப் பிதா.???
----
-இரா.சந்தோஷ் குமார்.