குறும்பு பாக்கள் - சந்தோஷ்

காணி நிலம்
கேட்டானே பாரதி
கொடுத்தாயா பராசக்தி
அவனின் கல்லறைக்காவது ?

----
காலம் மாறிவிட்டது
இன்றைய சீதையர்கள்
கோடு கிழிக்கிறார்களாம்
வில்லற்ற இராமன்களுக்கு..!

----

சிவப்பு வீதிகளிலெல்லாம்
விபச்சாரிகளா ?
பச்சை வீதிகளிலெல்லாம்
கண்ணகிகளா ?

----

குடிக்காரனிடமும் நாட்டின்
குடிகெடுப்பவனிடமும்
பரிமாறுகையிலும் சிரித்தப்படியே
இருக்கிறார் ரூபாய் காந்தி
உண்மையில் அவர் மகாத்மாதான்.

---

காந்தி பிறந்த
குஜராத்தில் மட்டும்
மதுவிலக்கு..!
காந்தி தேசப்பிதா அல்ல
மாநிலப் பிதா.???
----





-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (10-Jun-15, 1:13 pm)
பார்வை : 106

மேலே