நிறைவு என்பது இனிய தொடக்கம் - 12264
புல்வெளியின் பசுமையும்
போரடிக்கும் எனச்சொல்லி
பூக்க வைத்தான் பூக்களை
புதுமையென இறைவன்......
பொங்கவைத்த இன்பத்திலும்
பொத்தி வைத்து துன்பத்தை
புலம்பலோடு படிக்க வைத்தான்
புத்திசாலி இறைவன்.........
இன்பமெது துன்பமெது
இதையறிய முயலுகையில்
இறுதிநாளை கொண்டு வந்தான்
இனிமையாக இறைவன்...
புலப்பட்டதை ரசித்திருந்தேன் - உண்மை
புரிவதற்குள் மறைகின்றேன்
புலருமோ மீண்டும் வாழ்வு - சரி அது
போகட்டும் - மரணமே இனியாவது என்னை வாழவிடு....!!