உபியில் நேற்று மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டார்

உ.பி.யில் நேற்று மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டார்.....

பிலிபெட் மாவட்டத்தில், ஹைதர்கான் என்ற பத்திரிகையாளரை 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடுமையாக தாக்கியுள்ளது. பின்னர் தங்களது இருசக்கர வாகனத்தின் பின்புறம் ஹைதர்கானை கயிற்றால் கட்டிய அந்த கும்பல், சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த ஹைதர்கான் பிலிபெட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அவர் எழுதி வந்ததால் ஆத்திரமடைந்த கும்பல் இந்த வெறித்தனமான செயலில் ஈடுபட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாக்கி தெரிவித்துள்ளார்.
- இது செய்தி -

முலாயம் ஆண்டால் என்ன / மாயாவதி ஆண்டால் என்ன...? காங்கிரஸ் / பாஜக ஆட்சி செய்தாலும் ரவுடிசம் / குண்டாயிசம் / கொலை / கற்பழிப்பு / எல்லாம் மிக மிக சாதாரனப்பா என்கிறார்கள்....

பத்திரிக்கையாளர்கள் / முற்போக்குவாதிகள் / இடதுசாரிகள் / போன்றவர்கள் உ.பி.யில் வாழவே முடியாத சூழல் தான்.....போதாக்குறைக்கு காவி தீவிரவாதிகள் நிறைந்த மாநிலம் வேறு....

இவை போக வாரம் ஒருமுறை மதக்கலவரம்....மேற்கண்ட அணைத்து செயல்களையும் இந்த கலவரத்தில் செய்து முடித்து விடுவார்கள். காவிகளும் / குண்டர்களும் இஸ்லாமியருக்கு எதிராக....

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (16-Jun-15, 4:01 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 89

மேலே