மனங்கவர் காதலி - 8

இருகண்மேல் மொய்த்தெந்தன்
புறப்பார்வை குருடாக்கிச்
சிறுகாது கூர்தீட்டிச்
சிறிதேனுங் கேளென்றாய்!

அகப்பார்வை காண்கின்றேன்,
அழுக்கன்றி வேறில்லை!

புழுக்கண்கள் மீதெல்லாம்
மருந்திட்டுக் காக்கின்ற
மறுஜென்மம் வாய்த்தது,
மகிழ்கிறேன் கண்மணீ!!!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (19-Jun-15, 10:39 am)
பார்வை : 165

மேலே