அறையில் ஆனந்தம்

ஓங்கி அறைந்த அப்பா !
ஒப்பாரி வைக்கும் மகன் !
ஒடுங்கி ஒழிந்த தாய் !
அழுகை அமைந்தபின்
அறையில் அமைதி !
அறைந்த கைகள் அவனை அருகில் அழைத்தன !
நடுங்கிய அவன் ஒட்டி ஒடுங்கிட
தட்டிக்கொடுத்து தயங்கிய மகனுக்கு தண்ணீர் கேட்டார் தந்தை !
கண்ணீர் துடைத்துக்கொண்டு தண்ணீர் குவளையுடன் தாய் !
தாகம் தனித்த மகனிடம் தன்மையுடம் கேட்டார் அப்பா !
தேர்வில் தவறியது தவறில்லையா ?
உன்னிடம் என்ன குறைவைத்தோமென்று !
உள்நாக்கை உன்று விழுக்கியவன் விம்பிச் சொன்னான்
உங்களை என்று !!
புரிந்தது தவறு !
ஆனந்த அழுகைகளில்
அறையில் ஆனந்தம் ..