கண்கொண்ட நீர் மாறுமோ

மாம்பழத்துக் கீற்றாக,
மேனிதன்னைக் கொண்டாளோ
மஞ்சத்தில் தஞ்சத்தைக் கொண்டாளோ
விஜயா.....விஜயா...... ( மாம்ப )
கொஞ்சுகின்ற மொழியாளோ
கொயிலுள்ள சிலையாலோ
அஞ்சுகின்ற மானோடு
ஆடுகின்ற விழிகளோ ?
மென்நடையை தானுதிர்க்கும் மட அன்னமோ
தேன் நிறைந்த மதுக் கிண்ணமோ ( தேன் ) ( மாம் )
முத்துநகைப் பள்ளாளோ
முறுவலிக்கும் சொல்லாளோ
அத்தைமகன் எனைத் தேடி
ஆளவந்த நல்லாளோ
சித்திரத்தின் எழில்சிந்தும் கலைசின்னமோ
செம்பவள உடல் வண்ணமோ ( செம் ) ( மாம் )
தேரசைவின் உருவாளோ
தேம்பவிட்டுப் பிரிந்தாளோ
மாறுகின்ற மனத்தாலே
மீள இங்கு வருவாளோ
கட்டிவைத்த கனவெல்லாம் நனவாகுமோ
கண்கள் கொண்ட நீர் மாறுமோ ?