மதுக் கண்ணாள்

பட்டுச் சிறகினை தட்டி விரித்துவான்
முட்டிப் பறக்கின்ற சிட்டு – மலர் மொட்டு – கரம்
தொட்டு மகிழ்ந்திட கிட்டே நெருங்கிட ,
விட்டு விலகுமென் நெஞ்சம் – நினை – வஞ்சும் !

கண்ணக் கதுப்பினில் சின்னம் பதித்திட ,
என்னைக் கவர்ந்திடும் கண்ணி – நதிப் – பொன்னி
கால் பின்னும் நடையினில் மின்னும் அழகினில் ,
பொன்னைப் பதித்திடும் மேனி – என் – தேனீ !

அல்லித் தண்டினை கொள்ளும் உருவினாள்
முல்லை நிகர்க்கின்ற பல்லாள் – நெஞ்சில் உள்ளாள்
வான் எல்லை இழுத்து என் உள்ளம் மயங்கிட ,
தொல்லை தருகின்ற பெண்ணாள் – மதுக் – கண்ணாள் !

எழுதியவர் : iராம்பாக்கம்.கவிஞர்.கனிமொ (27-Jun-15, 8:42 am)
பார்வை : 70

மேலே