நாளை என்பது -கார்த்திகா

அந்த நாளின்
கடைசி துளி வெளிச்சத்தை
மென்று கொண்டிருந்தது இருள்

சிறு பச்சையில்
உயிர்ப்பித்திருந்தது
மறுநாளில் மரித்திடும்
நரம்புகள் வறண்ட இலை

உடல் மெலிந்த பறவையின்
பிய்ந்த இறகுகள்
காற்றில் தொய்ந்தபடி

ஊற்றினை
தொலைக்கப் போகும்
பெரு நதி

உயிர் குடிக்கும்
மூச்சுக் காற்று

என் பாதச் சுவடுகள்
பதிந்த வெள்ளை பூமி

கருகிய சூரியனுடன்
கந்தகம் சேர்த்து
சுவாசம் கொள்வதற்கு

நாளை என்பது
இல்லாது போகட்டும்!!

எழுதியவர் : கார்த்திகா AK (5-Jul-15, 10:25 pm)
பார்வை : 126

மேலே