கற்பது எதனால்
ஒரு புறா..
ஒரு மன்னன்..
ஒரு கதை..
ஒரு கன்று..
ஒரு இளவரசன்..
ஒரு தேர்..
இவற்றை வைத்து
இன்னொரு கதை..
ஒரு சிலம்பு..
ஒரு பழி..
ஒரு கொலை..
நீதி..
இன்னுமொரு கதை..
எல்லாமே ..
வளர்ந்தபின் மறந்து விடுகிறது
கதைகள் என்று சொன்னதால்..!
..
இனியாவது
உண்மைகளை சொல்லி
கற்பிக்க சொல்லுவோமா..
..
மனிதராய் வாழ்வதற்கு?