மன்றலோசை

ஒவ்வொருமுறையும்
காற்றாய் ஓங்கியொலிக்கும்
தாயின் அழுகுரல்..........

கேட்காமலே கொய்யப்பட்ட
குழந்தைகள்
குரல்வலை நெறிக்கப்பட்டு
தூக்குமேடையில்
அலங்காரமாய்
விற்பனைக்காக..............

மன்றலாய்
ஒருசேர ஒலித்த
அலரலோசையை
அறியா மனமோ
அள்ளிச் சூட்டியது
கடவுளுக்கு.......

இனி யாரிடம்
போய் சொல்லும்
ஆயிரமாயிரம் ஆன்மாக்கள்
தங்கள்
அழுகுரலோசையை ..............

எழுதியவர் : பார்த்திபன் @ திலீபன் (11-Jul-15, 7:35 pm)
பார்வை : 75

மேலே