வாழ்க வைரமுத்து

எழுத்துச் சகதியில்
அரசியல்
நாடகமாமே !

*

ஊடக வாசலில்
உன் பெயர்தான்
முன் உதாரணமாமே!

*

உம்
ஆடைகள்
வைகைக்கரையில்
வெளுக்கப்படுவதனால்
சென்னை
வெயிலில்
நீ
கறுத்துப் போவதில்லையாமே !

*

விருதுகளை
விட்டுக்கொடுக்கத்
தெரியாத
பிடிவாதக் காரனாமே!

*

உன்
முன்னறிவையும்
பின்னறிவையும்
வைத்து
பலபேரை
முன்னுக்குவிட்டு
பின்னுக்குத் தள்ளிவிட்டாயாமே !

*

திரைப்பாட்டுக்குள்
செழுந்தமிழ்
செய்தது
படித்தபுத்தி
பாய்ச்சுகிறது
தமிழை..!
பாமரன்
பா....என்று
புரியாமல்
வாய் பிளக்கிரானாமே !

*

சினிமா
உன்னைக் காயடிக்காமல்
விடாதாமே!

*
கலைஞரை
அடிக்கடி
புகழ்வது
உனக்கு
நீயே
விருது
தயாரித்துக்
கொள்வதற்காமே!

*

கலங்காதே
வைரமுத்து!


உன்
இதயக்குளத்தில்
ஆயிரம்பேர்
கல்லெறிந்திருக்கலாம் !
*
நீ
கவிவில்
தயாரித்து
வைத்திருப்பது
மழலைக்கும்
தெரியும் !
*
நேற்று
உன்னை
ரோட்டில்
கிடக்கும் காகிதம்
என்று
சொன்னவர்கள்


உன்னை
இன்று
காற்றில்
பறக்கும்
பட்டமாக அல்லவா
பார்க்கிறார்கள் !

*

உன்
நிர்வாணத்தை
ஒருகையில்
மறைத்துக்கொண்டு
மறுகையில்
எமக்கு
கவியாடை அல்லவா
நெய்து
கொடுத்தாய் !

*

காலத்தின்
கால்பகுதியைத்தான்
கடந்திருக்கிறாய்!
வைரமுத்து.

இமைக்காமல்
இரு !

மனதில்
இறுக்கம்
இருக்கிறது
உனக்கு!

*

உன்னை
முறுக்கேற்றிக்கொள்ள
உனக்குள்
இன்னும்
வலுவிருக்கிறது.!


எழுது..!
இன்னும் எழுது..!
உனக்காக
காத்திருக்கிறது
இளைய
தலைமுறை..!


கணினி மயமாகிவிட்டதென
கவிதைகளை
கரை சேர்க்காதே..!


பழமையின்
இளமையிலிருந்து
வளமையாக்கு
உன்
அறிவுப் புலமையை
செழுமையாய்..!


நவீன
காலத்திலும்
உன்
கவிதை
வீணையின்
மூலம்
ஆழமாகும்!

*

கண்களை
கசக்காதே
வைரமுத்து !


நீ
கத்தரி
வெயிலில்
வெடித்த
வெள்ளரி!
*
நீ
வடுகப்பட்டி
மொட்டைப்பாறையில்
முளைத்த
வெ(க)lள்ளிச்செடி!
*
காலத்தின்
கடைசிவரை
கால்பதிக்க
கனவுகளோடு
காற்றில்பறக்கும்
அதிசயப்பறவை -நீ!
*
தொடுவானத்தை
தொட்டுவிட
தொலைதூரப்பறவயானாய்!
*
அந்த
வானம்
உனக்குப்
போதிமரம்!
*
உன்
தவத்தை
என்றும்
அது
கலைத்திடாது
*
அதுபோலத்தான்
நீயும்
வானத்தை
விலைபேசத் தெரியாதவன்!

ஏனெனின்,
வானத்தில்
விளைந்திருக்கும்
நட்சத்திரங்கள்
மண்ணுக்குச் சொந்தமானவைஎன
உமக்குத்
தெரியும்!

*

வருந்தாதே
வைரமுத்து
வானம்
தொட்டுவிடும்
தூரம்தான்!
*
சிகரத்தின்
சில்லைத் தொட்டுவிட்டாய்!
எல்லை தொட
இன்னொருவனும் வரலாம்!
எச்சரிக்கையாய்
இரு!
*
விழித்திரு!
*
நீ
சாதிக்கப் பிறந்தவனல்ல
சாதனைகளை
கற்றுக்கொடுக்கப்
பிறந்தவன்!
*
நீ
வாழ்வாய்!
*
தமிழ்
உன்னை
இனியும்
வாழவைக்கும்!
*
தமிழ்
அழிந்துவிட்டால்
நீ
இறந்துபோனதாய்
அர்த்தமடா !

***

வாழ்க வைரமுத்து !
வைரமுத்து வாழ்க !


-வெ.திருமூர்த்தி ,
முதுகலை முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்,
பாரதிதாசன் கலை&அறிவியல் கல்லூரி,
எல்லீஸ்பேட்டை,
ஈரோடு.


தமிழ்த்துறைத் தலைவர்




கல்லூரி முத்திரை கல்லூரி முதல்வர்

**********************************************************************************************************************

எழுதியவர் : திருமூர்த்தி (12-Jul-15, 10:59 am)
Tanglish : vazhga vairamutthu
பார்வை : 392

சிறந்த கவிதைகள்

மேலே