உன்னோடு நானும் என்னோடு நீயும் பஞ்ச பூதங்களோடு நாமும்

ஒரு உயிரை தேடி!
இரு மனம் ஏங்கி!
முப்பொழுதிலும்...
நான்மறையாக....
நிந்தன் ஞாபகம்!

ஐம்பெருங்காப்பியம்
வேண்டாமடி(டா)!!!!!
புன்னகையுடன்
நீ தரும்
ஒற்றைக் காப்பியே(Coffee)
போதுமடி(டா)!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பஞ்ச பூதங்களை
அடைய நினைத்தேன்!
நீயும் பஞ்ச பூதங்களை
அடைந்து கொண்டிருந்தாய்!
உன்னோடு நானும்..
என்னோடு நீயும்..
பஞ்ச பூதங்களோடு நாமும்..
ஐக்கியமாகிவிட்டோமடி(டா)!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (13-Jul-15, 7:34 pm)
பார்வை : 111

புதிய படைப்புகள்

மேலே