புதுக்கவிதைகள்

காதல் தோல்வி
அவள் கண்களில்
இருந்து வழிந்த
கண்ணீர்த்துளிகளை
மாலையாய்த்
தொடுத்துப் பாருங்கள்
அவள் அவன் மேல்
வைத்திருந்த
காதலின் ஆழம் தெரியும் !!

கண்ணீருடன் தனிமையில் நிற்கிறேன் நான் !!!
என் வாழ்க்கையில்
ஏமாற்றுக்காரர்கள் உண்டு .
ஆனால் ஏமாற்றமே என்
வாழ்க்கை என்றால் என்ன செய்வது ?
நம்பிக்கைத் துரோகிகள்
என் வாழ்க்கையில் பலர் உண்டு .
நான் நம்பியவனே எனக்குத்
துரோகியாகி விட்டான் எனில்
நான் என்ன செய்வது ?
பொய்யும் பித்தலாட்டமும்
மலிந்த இவ்வுலகில்
சிகரெட்டுடனும் பீர் பாட்டிலுடனும்
வாழ்க்கை நடத்தும் இவனிடம்
உண்மை அன்பை எப்படி
எதிர் பார்ப்பது ?ஏமாற்றமே
என் வாழ்க்கையா ?சொல்
இறைவா ! இனி எப்படி மாறும்
என் வாழ்க்கை ?கலங்குகிறேன் ;
என் வாழ்க்கையின் சொத்தென
என் வாழ்வின் சொர்க்கமென
நினைத்த இவனின் பாதையோ
வெளிச்சம் இல்லா இருட்டறை .
உண்மை அன்பை தேடித் பார்க்கும்
எனக்கு இவன் தந்த பரிசோ !
பொய்யும் ,நம்பிக்கைத் துரோகமும் .
என் மனதில் குடியேறிய இவனை
எடுத்தெறிய இயலாமல் தவிக்கும்
என் இதயத்தைக் கேட்டுப் பாருங்கள் !
என் கிழிந்து போன இதயமும்
உடைந்து போனக் கண்ணாடித் துண்டுகளும்
எனக்கு ஒன்றுதான் ; இரண்டையும்
இனிமேல் ஓட்ட முடியாது ;இனி
அவன் பாதை அவனுடன் செல்லட்டும் .
என் பாதையோ அவனின் நினைவுகளில்
நிற்கட்டும் ; அவனை மட்டுமே நேசிக்கத்
தெரிந்த இந்த இதயத்தில் வேறு
எவருக்கும் இடமில்லை ; அவனை
ஏற்கவும் மனமில்லை .நான் மட்டுமே
குடியிருக்கும் அவன் இதயத்தில்
வேருஒருத்தியின் கரை படிந்த நிழல் .
கண்களில் கண்ணீரோடு
தனிமையில் நிற்கிறேன் நான் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Jul-15, 2:27 pm)
பார்வை : 147

மேலே