நீ இல்லாத அகம்

விழித்தவுடன் தேடும்
பக்கத்து படுக்கையும்..

விழிக்க வைக்கும்
உன் கொலுசு சத்தமும் ..

காத்து இருக்கும்
காலை டீயும்,உணவும் ..


எப்போது வருவீங்க
என்ற ஏக்க குரலும்..

மறக்க நினைத்தாலும்
துரத்துகின்றன.

மெல்ல கொடியில் - உன்
அசையும் துணிகளும் ..

கோளம் தொலைந்த
வாசல்களும் ..

பூட்டி செல்லும் கதவுகளும்
திறந்து வைக்கின்றன..

உன் நினைவுகளின்
வாசனையை ..

இன்னும் எத்தனை காலம்
வலிகளோடு காத்து இருப்பது ?

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (22-Jul-15, 7:08 pm)
Tanglish : nee illatha agam
பார்வை : 368

மேலே